Friday, April 29, 2016

“பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).


சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் வ.உ. சிதம்பரனார் செய்த தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொ-ரு-வர் இந்தியாவில் பிறந்த-தில்லை.

ஆனாலும், வ.உ.சி. சூத்திரர்தானே _ அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது.

‘வெள்ளையனே வெளி-யேறு!’ என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில், கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அவ-ருக்குத்தான் “வெற்றி-லைப் பாக்கு’’ வைத்து அழைத்து முதல் இந்தியன் கவர்னர் ஜென-ரல் என்ற மகுடம் சூட்டப்-பட்டது; என்ன செய்வது, காந்-தியா-ரின் சம்பந்தியாகவும் ஆகி-விட்டாரே!
இன்னொரு குறிப்பு “குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்-டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்பு-களைக் கண்ணுறும் வாய்ப்-புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்-காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்-பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்-பவன் நிலம் முழுதும் தனக்-குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிரா-கரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்-தையும், சுதந்திரப் போராட்-டத்-துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. தமிழரின் தியாகத்-தையும் “மனச்சான்று’’ உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட “பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’ என்கிற இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது போலவே தகிக்கிறது.

வ.உ.சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களி-டத்திலும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்து-கொண்டு மடைதிறந்த தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் “இந்து’’ பத்திரிகை அலு-வலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரெங்க அய்-யங்கார் “வாடா சிதம்பரம்!’’ என்றழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம்பிள்ளை, சவுக்கியமா?’’ என்றழைத்தார் என்கிறார் வ.உ.சி.

வ.உ.சி. நினைவு நாளில் இந்த வரலாற்றுக் குறிப்பு-களை அசை போடுவோமாக!

நன்றி விடுதலை 18.11.09 

No comments:

Post a Comment