Friday, April 29, 2016

பூணூல்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்-டுமல்ல, திருப்பதி ஏழு-மலை-யானுக்கே 3 கிலோ தங்-கத்தில் பூணூல் அணி-வித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளி-தில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்-களும் ஒரே ஜாதி; இன்-னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பது-தான் அவர்களின் நினைப்-பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்-கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிரா-மணர்கள் என்று சொன்-னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடு-கின்றன.

தேவாதீனம் ஜெகத்-சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்-களுக்-குக் கட்டுப்பட்டது; தேவர்-கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்-திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்-களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்-பனர்களை முதன்மைப்-படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியா-ளர்கள் என்பதற்கு அடை-யாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்-றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை _ பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்-கங்களை வெட்டவேண்-டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்-குகிறதா?

- மயிலாடன்

விடுதலை 30.10.2009 

1 comment:

  1. thulukka theeviravatha david payya......vedam padikathavan ularala podure......quran sex book muhammad kama nabi thevudia payana pinpatra mudiathu

    ReplyDelete