Monday, April 25, 2016

மைசூரின் புலி என அழைக் கப்படும் திப்பு சுல்தான்

பிறப்பு: நவம்பர் 20, 1750
இடம்:  தேவனஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: மன்னர்
இறப்பு: மே 04, 1799
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு: மைசூரின் புலி என அழைக் கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தி யாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக் கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.
ஆரம்ப வாழ்க்கை: கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780இல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர் தொடுத் தார். பின்னர்,  1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் தன்னுடைய 32ஆவது வயதில் சுல்தானாக அரியனை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை தன்னு டைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் மைசூர் போர்: 1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமை யில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், அய்தராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர் தொடுத் தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்பு சுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந் தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், அய்தராபாத் நிஜாம் மற்றும் மராட்டி யர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நான்காம் மைசூர் போரும், திப்புவின் மரணமும்: போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைபேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படை தொடர்ந்து முன் னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல் தானிடம், தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் கூறிய போது, முடியாது என மறுத்து கூறிய அவர், ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம் என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4  ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.
ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்: திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல் லாமல், போரில் பீரங்கிகளையும் பயன் படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற் படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கி லேயருக்கு நிகராக நவீன ஏவுகணை களை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட் பத்தை முதன்முதலில் பயன்படுத்தி யவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்புசுல்தான் ஆட்சியில், பெண் களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில் களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல் படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத் தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட் சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத் தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசா ரணையும், தண்டனையும் அமைய வேண்டும் எனக் கருதினார். விவ சாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற் படுத்தினார்.
1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பி லும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.
http://viduthalai.in/component/content/article/97-essay/120290-2016-04-09-09-48-45.html

No comments:

Post a Comment